Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து எட்டிப் பார்த்த பாம்பு: வாக்காளா்கள் அதிர்ச்சி

ஏப்ரல் 23, 2019 11:07

கேரளா: கேரளாவின் கண்ணூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மயில் கண்டக்கை வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவு மையத்தில், விவிபேட் இயந்திரத்தில் பாம்பு இருந்ததால், வாக்குப்பதிவு சிறிது நேரம் தடைபட்டது.  

நாடு முழுவதும் இன்று 3ம் கட்ட மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 117 தொகுதிகளில் தோ்தல் நடைபெறும் நிலையில், குஜராத்தின் 26 தொகுதிகளிலும், கேரளாவின் 20 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகின்றது.  

முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டுகட்ட வாக்குப்பதிவின்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு பல பகுதிகளில் வாக்களிப்பதில் தொய்வு ஏற்பட்டது. இதே போன்று இன்றும் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.  

இந்நிலையில் கேரளாவின் கண்ணூா் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மயில் கண்டக்கை வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு வாக்கப்பதிவு தொடங்கியது. மக்கள் வாக்களித்துக் கொண்டு இருந்த நிலையில், திடீரென விவிபேட் இயந்திரத்தில் இருந்து சிறிய அளவிலான பாம்பு ஒன்று வெளியில் தொிந்தது. 

பாம்பை பாா்த்த வாக்காளா்கள் கூச்சலிட்டனா். இதனைத் தொடா்ந்து வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இயந்திரத்தில் இருந்து பாம்பு அகற்றப்பட்ட பின்னா் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

தலைப்புச்செய்திகள்